For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

களக்காடு அருகே காலரா-500 பேர் பாதிப்பு

By Staff
Google Oneindia Tamil News

களக்காடு: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே காலராவுக்கு 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

களக்காடு அருகில் உள்ள சிதம்பரபுரத்தில் கடந்த திங்கள் கிழமை முதல் காலரா நோய் பரவி வருகிறது. இந்த நோய்க்கு 300க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். நோயை தடுக்க மருத்துவ துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மேலும் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு காலரா பரவியுள்ளது. இவர்கள் களக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 500க்கும் மேற்பட்டவர்களை காலரா தாக்கியுள்ளது. மேல் சிகிச்சைக்காக பலர் ஆம்புலன்ஸ் மூலம் திருக்குறுங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X