புதிய தலைமை செயலக கட்டடத்திற்கு பூமி பூஜை
சென்னை: சென்னையில் ஜெர்மனி நிறுவனத்தால் கட்டப்படவுள்ள புதிய தலைமைச் செயலக வளாகத்திற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
சென்னை அரசினர் ஓமந்தூரார் வளாகத்தில், புதிய தலைமைச் செயலகமும், சட்டசபை கட்டடமும் அடங்கிய கட்டட வளாகம் எழும்பவுள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த நிறுவனம் இதைக் கட்டவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஜூன் மாதம் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது. நேற்று ஜெர்மனி நிறுவனத்தால் பூமி பூஜை போடப்பட்டது.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரூ. 425 கோடி செலவில் இந்தக் கட்டட வளாகம் கட்டப்படவுள்ளது. 18 மாதங்களில் கட்டி முடிப்பார்கள். நிச்சயமாக 18 மாதங்களுக்குள் முடித்து விடுவார்கள் என நம்புகிறோம்.
கட்டுமானப் பணிக்காக ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள அனைத்து மரங்களும் வெட்டப்படாது என்றார்.












Click it and Unblock the Notifications