ராஜினாமா கோரி கருணாநிதிக்கு குவியும் அதிமுக தந்திகள்
சென்னை: இலங்கைப் பிரச்சினையில் நாடகமாடும் முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டு் என்று கோரி அவருக்கு அதிமுகவினர் ஆயிரக்கணக்கில் தந்திகள் அனுப்பி போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
இலங்கைப் பிரச்சினையில் முதல்வர் கருணாநிதி நாடகமாடுகிறார். எனவே அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுகவினர் அவருக்கு ஆயிரக்கணக்கில் தந்திகள் அனுப்ப வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்திருந்தார்.
இதை ஏற்று அதிமுகவினர் தந்தி அனுப்பும் போராட்டத்தில் குதித்துள்ளனர். மாவட்டந்தோறும் ஆயிரக்கணக்கான தந்திகளை அவர்கள் அனுப்பி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட செயலாளரும், திருத்தி எம்.எல்.ஏவுமான கோ.ஹரி தலைமையில் 500 தந்திகள் அனுப்பப்பட்டன.
கடலூர் மாவட்டத்தில் 1000 தந்திகள் அனுப்பப்பட்டன. கடலூர் தந்தி அலுவலகத்தில் குவிந்த அதிமுகவினர் இலங்கைப் பிரச்சினையில் முதலைக் கண்ணீர் வடிக்கும் கருணாநிதி பதவி விலக வேண்டும் என்ற வாசகம் அடங்கிய தந்திகளை அவர்கள் அனுப்பினர்.