For Quick Alerts
For Daily Alerts
Just In
பெண் புலிகளின் தற்கொலை படை பயிற்சி முகாம் மீது விமானங்கள் குண்டுவீச்சு
கொழும்பு: முல்லைத் தீவில் உள்ள பெண் புலிகளின் தற்கொலைப் படையின் பயி்ற்சி முகாம் மீது இலங்கை விமானப் படை விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளன.
வில்லுபுரம் என்ற இடத்தில் உள்ள இந்த முகாம் மீது குண்டுக் வீசப்பட்டதாக இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது.
இந்தப் பகுதிக்கு புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மன் அடிக்கடி வந்து செல்வது உண்டு என்றும், இந்த பயிற்சி முகாமின் பொறுப்பாளரும் அவர் தான் என்றும் இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனால் பொட்டு அம்மானுக்கு குறி வைத்து இந்த விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
Comments
Story first published: Friday, October 31, 2008, 10:21 [IST]