For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பள்ளிக்கு வரும் சந்த்ராயன் இயக்குனர் அணணாதுரை

By Staff
Google Oneindia Tamil News

Annadurai
கோவை: நிலவுக்கு இந்தியா அனுப்பியுள்ள சந்த்ராயன் விண்கலத்தை வடிவமைத்து, சந்திராயன் திட்டத்தின் இயக்குனராகவும் உள்ள இஸ்ரோ விஞ்ஞானி அண்ணாதுரையின் பெற்றோருக்கு கிணத்துக்கடவு பகுதி பொது மக்கள் பாராட்டு விழா நடத்தி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடியை சேர்ந்த அண்ணாதுரை. இவரது தந்தை மயில்சாமி (71) ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். தாயார் பாலசரஸ்வதி (65).
குடும்பத்தில் மூத்தவரான அண்ணாதுரைக்கு மணிமேகலை, மகாலட்சுமி ஆகிய தங்கைகளும், மோகனசுந்தரம், பால சுப்பிரமணியன் ஆகிய சகோதரர்களும் உள்ளனர்.

அண்ணாதுரையின் பெற்றோர் கோவை பீளமேட்டில் ராதாகிருஷ்ணா மில் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு கோதவாடி பகுதி மக்கள் மற்றும் கோதவாடி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

பாராட்டு விழாவில் கலந்து கொள்ள அண்ணாதுரையின் தந்தை மயில்சாமி, தாயார் பாலசரஸ்வதி ஆகியோர் சொந்த ஊரான கோதவாடிக்கு வந்தனர்.

அவர்களை பொதுமக்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர். அண்ணாதுரை படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு அவர்கள் மேள தாளத்துடன் அனைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு அண்ணாதுரையின் தம்பி மோகன சுந்தரம் மாணவர்களிடையே பேசுகையில்,

நவம்பர் 8ம் தேதிக்கு பின் அண்ணாதுரை கோதவாடிக்கு வந்து தனது வெற்றியை பொது மக்களுடன் பகிர்ந்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.

மேலும் தான் படித்த பள்ளிக்கு கம்ப்யூட்டர் ஒன்றையும் அவர் வழங்க உள்ளார் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X