சிஆர்ஆர், ரெபோ ரேட் மீண்டும் குறைப்பு-சந்தைக்கு வரும் ரூ. 40,000 கோடி
மும்பை: ரிசர்வ் வங்கியில் வங்கிகள் வைத்திருக்க வேண்டிய இருப்புத் தொகை விகிதத்தை (cash reserve ratio-CRR) 5.5 சதவீதமாக ரிசர்வ் வங்கி இன்று குறைத்தது.
மேலும் தன்னிடம் வங்கிகள் பெறும் கடனுக்கான வட்டி விகிதத்தை (repo rate) 7.5 சதவீதமாகக் குறைத்துள்ளது. இதுவரை இது 8 சதவீதமாக இருந்தது.
இதன்மூலம் வங்கிகளிடம் கூடுதலாக ரூ. 40,000 கோடி நிதி குவியும். சந்தையி்ல் பணப் புழகத்தை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது.
பண வீக்க விகிதம் தொடர்ந்து குறைந்து கொண்ட வருவதால் தைரியமாக பணப் புழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
கடந்த 2 மாதத்தில் சிஆர்ஆர், ரெபா ரேட்களை பலமுறை குறைத்ததன் மூலம் சந்தையில் கூடுதலாக ரூ. 1.85 லட்சம் கோடியை புழக்கத்தில் விட்டது மத்திய அரசு. இந் நிலையில் மேலும் ரூ. 40,000 கோடி சந்தைக்கு வரும் வகையில் இன்று இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதனால் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்கலாம்.