For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை: கட்சிகள் ஒன்றுபட வேண்டும்-கி.வீரமணி

By Staff
Google Oneindia Tamil News

நீடாமங்கலம்: இலங்கை தமிழர் பிரச்சனையில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்று தி.க தலைவர் கீ.விரமணி கருத்து தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தி.க தலைவர் கி.வீரமணி பேசுகையில், ஈழ தமிழர்கள் அவர்களது சொந்த நாட்டில் அகதிகளாக வாழ்கின்றனர்.

தமிழர்களை தங்களது நாட்டின் குடி மக்களாகக் கூட கருத சிங்கள அரசு முன் வரவில்லை.

இலங்கை தமிழர் பிரச்சனையில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும்.

முல்லை பெரியாறு பிரச்சனையில் கேரள கட்சிகளும், காவிரி பிரச்சனையில் கர்நாடக கட்சிகளும் ஒரணியில் நிற்கின்றன.
ஆனால் இங்கு மட்டும் தமிழர் நலன் காக்க ஒரணியில் நிற்க பல அரசியல் கட்சிகள் தயக்கம் காட்டுகின்றது.

ஈழ தமிழர் பிர்சனையில் அரசியல் தீர்வு காணப்படும் என்று அறிவிப்பு வந்துள்ளது தமிழர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி.

விரைவில் சிங்கள அரசு போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கேட்கும் காலம் வரும் என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X