For Daily Alerts
Just In
நிலவை நெருங்கியது சந்த்ராயன்!
இன்று அதிகாலை 4.56 மணிக்கு சந்த்ராயனின் நியூட்டன் ராக்கெட்டுகள் பெங்களூர் தரைக்கட்டுப்பாடு மையத்தில் இருந்து இயக்கப்பட்டன. இரண்டரை நிமிடங்கள் இயக்கப்பட்ட அந்த ராக்கெட்டுகள் சந்த்ராயனை 3,80,000 கி.மீ தூரத்துக்கு கொண்டு சென்றன.
வரும் 8ம் தேதி அந்த விண்கலம் நிலவின் வட்டப் பாதைக்குள் நுழைந்துவிடும். இதையடுத்து அதிலிருந்து ஒரு துணை விண்கலம் நிலவுக்குள் அனுப்பப்படும். அது நிலவில் இந்திய தேசியக் கொடியை நாட்டுவதோடு, சில ஆய்வுகளிலும் ஈடுபடும்.
சந்த்ராயன் தொடர்ந்து 2 ஆண்டுகள் நிலவை சுற்றி வந்து அதன் பல்வேறு பகுதிகளையும் ஆய்வு செய்யும்.
Comments
Story first published: Tuesday, November 4, 2008, 11:52 [IST]