பஸ்சில் ஆசிரியையை கொலை செய்த கணவர்
செஞ்சி: செஞ்சி பஸ் நிலையத்தில் பஸ்சில் அமர்ந்திருந்த அரசுப் பள்ளி ஆசிரியை அவரது கணவர் கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அருள்நாட்டை சேர்ந்தவர் சாமுவேல் சவுரிராஜன் (45). இவரது மனைவி அகஸ்டின் குணவதி (27) உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் ஊராட்சி தொடக்கப்பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று காலை குணவதி உளுந்தூர்பேட்டை செல்லும் தனியார் பஸ்சில் அமர்ந்தார். அப்போது பஸ்சில் ஏறிய குணவதியின் கணவர் சாமுவேல் திடீரென மனைவியை கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு தப்பி ஓடினார்.
பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை பஸ் டிரைவர் செஞ்சி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் குணவதி வழியிலேயே இறந்தார்.
இந் நிலையில் சாமுவேல் செஞ்சி காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசாரிடம் அவர் கூறுகையில்,
எனது மாமா மகளான குணவதியை 8 ஆண்டுகளாக காதலித்து அவரது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டேன்.
திருமணத்துக்கு பின் நாங்கள் சென்னை பரங்கிமலையில் குடியேறினோம். நான் லாரி டிரைவராக வேலை பார்த்தேன். எங்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந் நிலையில் குணவதிக்கு உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூரில் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைத்தது. இதனால் ஆசனூருக்கு குடி வந்தோம்.
நான் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தேன். நான் காலையில் வேலைக்கு சென்றால் இரவில் தான் வீட்டுக்கு வருவேன்.
குணவதி பணியாற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் லெனின் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வதாகவும், குணவதிக்கும் அவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாகவும் தெரிய வந்தது.
இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. துரோகம் செய்த குணவதியை பழிவாங்கவே அவரை கத்தியால் குத்தி கொன்றேன் என்று கூறியுள்ளார்