For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒகேனக்கல் திட்ட டெண்டரை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

Hogenakkal
பெங்களூர்: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு டெண்டர் கோரியிருப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்என்று கர்நாடக நீர்ப்பாசன துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறினார்.

அவர் கூறுகையி்ல்,

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக ஜப்பான் நிதியுதவியுடன் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவை கடந்த பிப்ரவரியில் தமிழக முதல்வர் கருணாநிதி நடத்தினார்.

அப்போது, தமிழக அரசுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடந்ததால், தேர்தலுக்கு பிறகு இந்த திட்டத்தை பற்றி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் கருணாநிதி அறிவித்தார். ஆனால், தேர்தல் முடிந்த பிறகு கர்நாடகாவுடன் தமிழக அரசு பேசவில்லை.

இந் நிலையில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்காக டெண்டர் கோரும் முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. ஒகேனக்கல் எல்லை பிரச்னைக்கு தீர்வு காணும் வரை இந்த திட்டத்தை தடுக்கும்படி மத்திய அரசுக்கு கர்நாடகா விடுத்த கோரிக்கை இன்னும் ஏற்கப்படவில்லை.

கர்நாடகாவின் உரிமையை நிலைநாட்டிக் கொள்வதில் நாங்கள் தயக்கம் காட்ட முடியாது. எனவே, ஒகேனக்கல் திட்டத்துக்கு டெண்டர் விடப்படுவதை தடுத்து நிறுத்தும்படி மத்திய அரசிடம் மீண்டும் வலியுறுத்துவோம். மத்திய அரசு இதையும் புறக்கணித்தால், தமிழக அரசின் டெண்டருக்கு விதிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். இது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம் என்றார் பொம்மை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X