For Daily Alerts
Just In
கருணா குழு பொறுப்பாளர் சுட்டுக் கொலை
மட்டக்களப்பு: இலங்கையின் மட்டக்களப்பில் நடந்த சண்டையில், கருணா தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பொறுப்பாளர் தங்க்பாண்டியன் என்கிற பத்மநாதன் பாலகிருஷ்ணன் உள்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மட்டக்களப்பு, சித்தாண்டி முருகன் ஆலயம் உள்ள பகுதியில், சித்தாண்டி பிரதான வீதியில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தில் கருணா குழுவின் குடும்பிமலை கோட்ட சித்தாண்டி பிரதேச பொறுப்பாளரான தங்கபாண்டியன், அவரது பாதுகாப்பாளரான சுடர் என்கிற சின்னப்பிள்ளை யோகராசா ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவர்களை விடுதலைப் புலிகள்தான் சுட்டுக் கொன்றதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Comments
Story first published: Thursday, November 6, 2008, 13:52 [IST]