ஓசாமா மகனை நாடு கடத்தியது எகிப்து
அல் கொய்தாவை நிறுவிய பின் லேடனின், முதல் மனைவிக்குப் பிறந்த நான்காவது மகன் ஓமர் பின் லேடன். லேடனின் மகனாக இருந்தாலும் அமைதியைப் போதித்து வருகிறார் ஓமர். தனது தந்தை திருந்த வேண்டும் என்றும் கோரி வருகிறார்.
27 வயதே ஆகும் ஓமர், இங்கிலாந்தைச் சேர்ந்த 52 வயது பெண்மணியான ஜேன் பெலிக்ஸ் பிரவுனை (திருமணத்திற்குப் பின்னர் ஜெய்னா அல் சபா என பெயரை மாற்றிக் கொண்டு விட்டார்) திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் தனது மனைவியுடன் திடீரென ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றார் ஓமர். அங்கு அரசியல் புகலிடம் கோரி விண்ணப்பித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அவரது கோரிக்கையை ஸ்பெயின் அரசு நிராகரித்து விட்டது.
இதையடுத்து அவர் மீண்டும் கெய்ரோ திரும்பினார். ஆனால் அதிர்ச்சி வைத்தியமாக, எகிப்து அரசு, அவரை கெய்ரோவுக்குள் நுழைய விடாமல், விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தியது. அவரையும், அவரது மனைவியையும் நாட்டுக்குள் நுழையக் கூடாது என்று கூறி நாடு கடத்தி விட்டது.
இதையடுத்து ஓமரின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது