பங்குச் சந்தைகளில் இன்று கடும் வீழ்ச்சி
மும்பை: தேசிய பங்குச் சந்தையான நிப்டியில் இன்று 200 புள்ளிகளுக்கும் மேல் சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை குறைந்தது.
இந்திய பங்குச் சந்தைகளின் ஏற்ற இறக்கம் ஆச்சர்யங்களைக் கடந்த ஒன்றாகிவிட்டது. சென்செக்ஸில் முதல் நாள் விறுவிறு ஏற்றமென்றால் அடுத்த நாள் செம சறுக்கல்.
அப்படித்தான்... வெள்ளிக்கிழமை பத்தாயிரம் புள்ளிகளுக்கு மேல் நிலைபெற்ற சென்செக்ஸ், திங்கள் கிழமை 500 புள்ளிகள் அதிகம் உயர்ந்த்து. ஆனால் இன்று மீண்டும் 10000 புள்ளிகளுக்குக் கீழ் குறைந்துள்ளது.
வர்த்தக நேரம் முடிவில் 696 புள்ளிகள் குறைந்து, 9839-ஆக நிலைபெற்றது. நிப்டியில் இன்று 7 சதவிகித சரிவு. இன்று கடைசி மணி (அதாவது வர்த்தக நேர முடிவில் அடிக்கும் மணி!) அடிக்கும்போது நிப்டி 209.60 குறைந்து 2938-ல் நிலைபெற்றது.
ஸ்டெர்லைட் , ஹிண்டால்கோ, பிஎச்இஎல், டிஎல்எப், டாடா ஸ்டீல் பங்குகள் இன்று கடும் சரிவைச் சந்தித்தன.
ஆசிய, ஐரோப்பிய சந்தைகள் டல்!
ஆசியாவின் முக்கியப் பங்குச் சந்தைகள் ஹாங்செங், ஷாங்காய், நிக்கி, கோப்ஸியிலும் இன்று சரிவு காணப்பட்டது. துபாய் பங்குச் சந்தையில் 7 சதவிகித சரிவு ஏற்பட்டது. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் பங்குச் சந்தைகளும் பெரும் சரிவைச் சந்தித்தன.