'பாபர் மசூதி': டிச. 6ல் தமுமுக ரயில் மறியல்
காரைக்கால்: பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தமுமுக அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் காரைக்கால் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
பாபர் மசூதியை அதே இடத்தில் கட்டித்தருவோம் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் கூறிய வாக்குறுதியை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லிபர்ஹான் கமிஷன் விசாரணையை மேலும் நீடிக்காமல், முடிவை வெளியிட மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்.
தீவிரவாத, குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுபடும் சங் பரிவார் அமைப்புகளை சேர்ந்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
தமுமுக தலைமை அறிவித்தபடி, காரைக்கால் மாவட்ட தமுமுக சார்பில் காரைக்காலை அடுத்துள்ள பேரளம் ரெயில் நிலையத்தில் வருகிற டிசம்பர் 6ம் தேதி ரெயிலை மறித்து போராட்டம் நடத்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications