ஆண்மை இழந்து எஸ்கிமோக்கள் போல குனிந்தால் அதிமுகவில் இருக்கலாம்: ஜோதி
விழுப்புரம்: ஆண்மை இழந்து, எஸ்கிமோக்கள் போல குனிந்தே இருந்தால் அதிமுகவில் அவர்கள் இருக்கலாம் என வக்கீல் ஜோதி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து வந்த ஜோதி, சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு கூட்டத்தில் வக்கீல் ஜோதி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, ஜெயலலிதா மீது கடந்த 1997 ம் ஆண்டு முதல் வழக்குகள் தொடரப்பட்டது. 12 ஆண்டுகளாக நான் வேறு எந்த வழக்குகளையும் எடுக்காமல் இவைகளை மட்டுமே கவனித்து வந்தேன்.
சசியும், 18 உறவினர்களும் ..
ஜெயலலிதாவுடன் உள்ள சசிகலா உடனிருந்து கொல்லும் ஒரு நோய். தற்போது அதிமுகவை வழி நடத்துபவர்கள் சசிகலாவும், அவருடன் உள்ள அவரது உறவினர்கள் 18 பேரும் தான். அதிமுகவில் ஜனநாயகம் செத்துவிட்டது.
மற்றவர்களை மதிக்காத ஜெயலலிதா சிசிகலாவைப் பார்த்து பயப்படுகிறார்.
ஆண்மை இழந்து, எக்சிமோக்கல் போல் குனிந்து இருப்பவர்கள் மட்டுமே அக் கட்சியில் இருக்க முடியும்.
ஜெ.விடம் அடி கூட வாங்கியுள்ளனர்
அதிமுகவில் உள்ள பலர் ஜெயலிலதாவிடம் அடி கூட வாங்கியுள்ளனர். அவர்கள் யார் என்பது எனக்கு தெரியும்.
இதுவரை 7 மாவட்ட செயலாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மதுரை செல்லூர் ராஜு 4 முறை நீக்கப்பட்டு தற்போது 5 வது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவை சேர்ந்த 4 எம்எல்ஏ-க்கள் திமுகவிற்கு விரைவில் வரப்போகின்றனர். அப்போது அவர்கள் யார் என்பது உங்களுக்கு தெரியும் என்றார் அவர்.