சென்செக்ஸில் இன்று ஜப்பான் எஃபெக்ட்; 300 புள்ளிகள் சரிவு
மும்பை: இன்றும் பங்குச் சந்தையில் நிலையற்ற தன்மைதான் நிலவுகிறது. திங்கள்கிழமை காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் 159 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ் பிற்பகலுக்குள் மேலும் 240 புள்ளிகளை இழந்து 8000 புள்ளிகளுக்கும் கீழே சரிந்தது.
கடந்த இரு வாரங்களில் சென்செக்ஸ் 8 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே இறங்குவது இது இரண்டாவது முறை. மீண்டும் சற்று உயர்ந்த சென்செக்ஸ் பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி 9023 புள்ளிகளாக இருந்தது.
நிப்டியில் ஆரம்பத்தில் 100 புள்ளிகளுக்கும் மேல் சரிவு ஏற்பட்டது. பின்னர் சற்று முன்னேற்றம் தெரிந்தது. 73 புள்ளிகள் குறைந்து 2737 புள்ளிகளாக உள்ளது நிப்டி.
உலகின் பொருளாதார பெருமந்த சுழலுக்குள் தங்கள் நாடும் சிக்கியுள்ளதாக ஜப்பான் அறிவித்ததைத் தொடர்ந்து ஆசிய பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சியில் உள்ளன. அதன் பாதிப்புதான் சென்செக்ஸிலும் இன்று எதிரொலிக்கிறது.