For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை: சிபிஐ அனைத்துக் கட்சி கூட்டம்; திமுக-அதிமுக புறக்கணிப்பு

By Staff
Google Oneindia Tamil News

Pandian
சென்னை: இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தை திமுக, அதிமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம், பாஜக ஆகிய முக்கிய கட்சிகள் புறக்கணித்துவிட்டன.

அதே நேரத்தில் பாமக, மதிமுக ஆகியவை இதில் பங்கேற்றன. மேலும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், லட்சிய திமுக தலைவர் விஜய.டி.ராஜேந்தர், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன், பெரியார் தி.க. தலைவர் விடுதலை ராஜேந்திரன், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் அப்துல் சமது, தமிழர் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு, தமிழ் தேச மார்க்சிஸ்ட் தலைவர் ராஜேந்திர சோழன், இந்திய தேசிய லீக் தலைவர் இனாயத்துல்லா ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மூத்த தலைவர் நல்லகண்ணு உள்பட அக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் இதி்ல் பங்கேற்றனர்.

கூட்டம் துவங்கியதும் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் நினைவாக மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னதாக இந்தக் கூட்டம் குறித்து முதல்வர் கருணாநிதி கூறுகையில், இந்த கூட்டத்துக்கும் திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை கூறிவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X