இலங்கை: சிபிஐ அனைத்துக் கட்சி கூட்டம்; திமுக-அதிமுக புறக்கணிப்பு
அதே நேரத்தில் பாமக, மதிமுக ஆகியவை இதில் பங்கேற்றன. மேலும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், லட்சிய திமுக தலைவர் விஜய.டி.ராஜேந்தர், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன், பெரியார் தி.க. தலைவர் விடுதலை ராஜேந்திரன், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் அப்துல் சமது, தமிழர் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு, தமிழ் தேச மார்க்சிஸ்ட் தலைவர் ராஜேந்திர சோழன், இந்திய தேசிய லீக் தலைவர் இனாயத்துல்லா ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மூத்த தலைவர் நல்லகண்ணு உள்பட அக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் இதி்ல் பங்கேற்றனர்.
கூட்டம் துவங்கியதும் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் நினைவாக மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னதாக இந்தக் கூட்டம் குறித்து முதல்வர் கருணாநிதி கூறுகையில், இந்த கூட்டத்துக்கும் திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை கூறிவிட்டார்.