என்ஆர்ஐ முதலீடுகள், டெபாசிட்டுகளுக்கு அதிக வட்டி!
பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகள் வட்டி வீதத்தை 0.75 சதவீதம் வரை உயர்த்தி உள்ளன. வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் சம்பாதிக்கும் பணத்தை தாய்நாட்டில் முதலீடு செய்ய இந்திய வங்கிகளில் கணக்கு தொடங்க அனுமதிக்கப்படுகிறது. இதற்கு என்ஆர்இ கணக்கு எனப்படுகிறது.
நாட்டின் மிகப் பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க்கில் டாலராக செய்யப்படும் முதலீடுக்கு இதுவரை இருந்த 3.42 சதவீத வட்டி 4.17 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. யூரோவுக்கு 5.12 சதவீதத்தில் இருந்து 5.87 சதவீதமாகவும், பவுண்டுக்கு 6.26ல் இருந்து 7.01 சதவீதமாகவும் வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ வங்கியும் டாலருக்கு 3.35 சதவீதத்தில் இருந்து வட்டியை 4.1 சதவீதமாக உயர்த்தியுள்ளது. பவுண்டுக்கு 7.01 சதவீத வட்டி தருகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி டாலர் முதலீடுக்கு வட்டியை 3.42 சதவீதத்தில் இருந்து 4.17 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன்மூலம், வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீடு அதிகரிக்கும் என்று வங்கிகள் எதிர்பார்க்கின்றன.