For Daily Alerts
Just In
அவசரமாய் தரையிறங்கிய இலங்கை விமானம்
கொச்சி நெடும்பசேரி விமான நிலையத்திலிருந்து இன்று காலை யுஎல் 165 என்ற அந்த விமானம் 97 பயணிகளுடன் கிளம்பியது. ஆனால், அதன் முன் சக்கரம் முழுவதும் உள்ளே செல்லவில்லை. பாதியில் நின்றது.
இதையடுத்து விமானத்தை மீண்டும் கொச்சிக்கே திருப்பினார் விமானி. சரியாக இயங்காத முன் சக்கரத்துடன் அந்த விமானம் தரையிறங்க இருந்ததால் விமான நிலையம் முழு அவசர கால நிலைக்குக் கொண்டு வரப்பட்டன.
ஆம்புலன்ஸ்கள், மருத்துவக் குழுவினர், தீயணைப்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். ஆனாலும் அந்த விமானம் காலை 8.45 மணிக்கு பத்திரமாகத் தரையிறங்கியது.
பி்ன்னர் அதிலிருந்த பயணிகள் வேறு விமானத்தில் கொழும்பு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
இந்தச் சம்பவத்தால் கொச்சி விமான நிலையத்தில் 30 நிமிடங்கள் விமான சேவை பாதிக்கப்பட்டது. பல விமானங்கள் தாமதமாகவே தரையிறங்க முடிந்தது.
Comments
Story first published: Thursday, November 20, 2008, 15:26 [IST]