For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிட்டி பேங்க் சிஇஓ பதவியிலிருந்து விலகினார் நாயர்

By Staff
Google Oneindia Tamil News

Sanjay Nayar
மும்பை: சிட்டி வங்கியின் தெற்காசிய தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து சஞ்சய் நாயர் ராஜினாமா செய்துள்ளார். இவர் தான் சிட்டி வங்கியின் இந்தியப் பிரிவை நிர்வகித்து வந்தார்.

இவர் உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனமான கோல்பெர்க் கிராவிஸ் ராபர்ட் அண்ட் கோ நிறுவனத்தில் (Kohlberg Kravis Roberts&Co-KKR ) சேருகிறார்.

நாயருக்கு பதிலாக சிட்டி வங்கியின் புதிய செயல் அதிகாரியாக மார்க் ராபின்சன் நியமிக்கப்பட்டுள்ளார். மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகளில் சிட்டி வங்கியின் செயல்பாடுகளை இவர் கவனிப்பார்.

24 ஆண்டு காலம் சிட்டி வங்கியில் பணியாற்றியுள்ள இவர் இப்போது ரஷ்யாவை தலைமையிடமாகக் கொண்டு ரஷ்யா, உக்ரைன், கஸாகிஸ்தானில் இந்த வங்கியை நிர்வகித்து வருகிறார்.

23 ஆண்டுகாலம் சிட்டி வங்கியில் பணியாற்றிய நாயர், அமெரிக்காவின் கேகேஆர் நிறுவனத்தின் இந்தியக் கிளையைத் தொடங்கி நிர்வகிக்கவுள்ளார். இப்போது இந்த நிறுவனத்துக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஹாங்காங், சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியாவில் கிளைகள் உள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X