For Daily Alerts
Just In
பெண் துறவி பிரக்யா உள்ளிட்டோர் மீது புதிய சட்டத்தின் கீழ் வழக்கு
மும்பை: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாத பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் 12 பேர் மீது மகாராஷ்டிர மாநில திட்டமிட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதிய வழக்குப் பதிவு செய்யப்படவுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் கடும் சட்டமாக கருதப்படுவது இதுவாகும். இந்தச் சட்டத்தின் கீழ் தற்போது பிரகாய் சிங், லெப்டினென்ட் கர்னல் பிரசாத் புரோஹித், முன்னாள் ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உள்ளிட்டோர் தற்போது கைது செய்யப்படவுள்ளனர்.
இதுதொடர்பான மனு ஒன்றை மகாராஷ்டிர மாநில திடடமிட்டி குற்றத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில், மும்பை தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில் குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 12 பேரையும் கைது செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
Story first published: Friday, November 21, 2008, 9:08 [IST]