For Quick Alerts
For Daily Alerts
Just In
புலிகளின் ரன்வேயை கைப்பற்றிய ராணுவம்
கொழும்பு: இலங்கையில் பரந்தன்-பூனேரி சாலையில் விடுதலைப் புலிகளின் விமானப் படை ரன் வேயை ராணுவம் கைப்பற்றியது.நிவில் என்ற இடத்தில் உள்ள இந்த 200 மீட்டர் நீள ரன்வேயை விடுதலைப் புலிகள் தங்களது சிறிய ரக விமானங்களை இயக்க பயன்படுத்தி வந்ததாக ராணுவம் கூறியுள்ளது. இதுபோல புலிகள் மேலும் சில ரன்வேக்களையும் புலிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
பரந்தன்-பூனேரி சாலையின் 200 மீட்டர் பகுதியையே மேம்படுத்தி அதையே புலிகள் ரன் வேயாக பயன்படுத்தி வந்ததாகவும், இதை அவசர காலத்தில் விமானங்களை தரையிறக்க பயன்படுத்தி வந்ததாகவும் ராணுவம் கூறுகிறது.
இப்போது பரந்தனுக்கு 14 கி.மீ. மேற்கே நிலை கொண்டுள்ள ராணுவத்தின் டாஸ்க் போர்ஸ் 1 படைப் பிரிவு அந்தப் பகுதியை முழுவதும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ராணுவம் கூறுகிறது.
Comments
Story first published: Friday, November 21, 2008, 10:38 [IST]