மாபெரும் சிக்கலில் சிட்டி பேங்க்
இவ்வளவு பெரிய வீ்ழ்ச்சியை அந்த வங்கி சந்தித்திருப்பது கடந்த 15 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.
அமெரிக்க நிதி சி்க்கலுக்கு இரு ஆண்டுகளுக்கு முன்பே வீழ்ந்துவிட்டது சிட்டி வங்கி. வங்கியின் வராக் கடன்கள் மூச்சு முட்டும் அளவுக்குப் போய்விட்டதால் திணறிக் கொண்டிருந்தது. இந் நிலையில் பொருளாதார மந்தமும் சேர்ந்து கொள்ள வங்கி வாழ்வா சாவா நிலையில் உள்ளது.
இத்தனைக்கும் அமெரிக்க அரசு இந்த வங்கிக்கு 25 பில்லியன் டாலர் நிதியுதவி அளித்தும் மக்களிடையே இந்த வங்கி குறித்த நம்பிக்கை போய்விட்டதால் பங்குகள் விலை போகவில்லை.
இந்த வங்கியில் செளதி இளவரசர் அல் வலீத் பின் தலாலுக்கு 4 சதவீத பங்குகள் உள்ளன. வங்கிக்கு உதவும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்தார்.
இதனால் வங்கியின் அவரது பங்குகளின் அளவு தான் 5 சதவீதமாக உயர்ந்ததே தவிர வேறு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. வங்கியின் பங்குகளின் விலை சரிவது நிற்கவில்லை.
நேற்று மட்டும் ஒரே நாளில் வங்கியின் பங்குகள் விலை 26 சதவீதம் அளவுக்கு வீழ்ந்துவிட்டது. இதையும் சேர்த்து இந்த ஒரே நிதியாண்டில் மட்டும் அந்த வங்கியின் பங்குகள் விலை 83 சதவீத அளவுக்கு வீழ்ச்சி கண்டுவிட்டன.
இதையடுத்து வங்கியின் சில பிரிவுகளை வி்ற்று விட அதன் தலைமை செயல் அதிகாரி விக்ரம் பண்டிட் உள்ளிட்ட அதன் உயர் மட்ட நி்ர்வாகம் யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் வேறு வங்கியுடனோ அல்லது நிதி அமைப்புடனோ சிட்டி பேங்கை இணைத்துவிடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இந்தியாவில் சிட்டி பேங்க்கின் 37 முக்கிய அதிகாரிகளை வங்கி பணி நீக்கம் செய்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் துணைத் தலைவர் பதவிக்கு இணையாக பதவிகளில் உள்ளவர்கள் ஆவர்.