ஜெயலலிதாவுடன் சோ ராமசாமி முக்கிய ஆலோசனை
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான அரசியல் கூட்டணிகளில் கட்சிகள் மும்முரமாகியுள்ளன. தமிழகத்தில் அரசியல் அணிகளில் பெரும் மாற்றம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
சமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பரதன், கிட்டத்தட்ட கூட்டணிக்கான வாய்ப்புகள் உறுதியாகி விட்டதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், சோ நேற்று போயஸ் தோட்டம் சென்று ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சிபிஐ, அதிமுக கூட்டணிக்கு வருவது உறுதியாகி விட்ட போதிலும் கூட, சிபிஎம், வருவதற்கான வாய்ப்புகள் இன்னும் தெளிவாகவில்லை. சேது சமுத்திரத் திட்டம், இந்துத்வா, இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக சிபிஎம்முக்கும், அதிமுகவுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மாத இறுதியில் டெல்லியில் நடைபெறும் சிபிஎம் பொலிட்பீரோ கூட்டத்திற்குப் பின்னர்தான் அந்தக் கட்சி அதிமுக அணிக்கு வருமா என்பது உறுதியாக தெரிய வரும்.