For Daily Alerts
Just In
டிச. 6ல் சென்னையில் தாக்குதல் நடத்தலாம்: போலீஸ்
இதுகுறித்த உத்தரவை நேற்று நடந்த சென்னை மாநகர உளவுப் பிரிவு இன்ஸ்பெக்டர்கள் கூட்டத்தின்போது, ஆணையர் ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
அப்போது அவர் இன்ஸ்பெக்டர்களிடையே பேசுகையில், டிசம்பர் 6ம் தேதியன்று வரும் அயோத்தி பாபர் மசூதி இடிப்பு தின நினைவு நாளையொட்டி மிகவும் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும்.
சென்னை நகருக்கு தீவிரவாதிகள் குறி வைக்கலாம் என்பதால், மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து சென்னை நகரில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
Comments
Story first published: Monday, November 24, 2008, 14:31 [IST]