For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்செக்ஸ்.. ஆரம்பமே சரிவு
மும்பை: பங்குச் சந்தையில் இன்றும் சரிவே காணப்பட்டது.
காலையில் சந்தை கூடியதும் சென்செக்ஸ் 10 புள்ளிகளை இழந்து குறியீட்டு எண் 8684.95 ஆனது.
அதே போல தேசிய பங்குச் சந்தையான நிப்டியும் காலை முதல் லேசான வளர்ச்சியும் சரிவுமாக தள்ளாட்டம் போட்டுக் கொண்டுள்ளது.
ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், மகிந்திரா அண்ட் மகிந்திரா, ரான்பாக்சி, டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் தான் இன்று சரிவை சந்தித்து சந்தையை கீழே இழுத்துப் போட்டன.
ஐசிஐசிஐ, எச்டிஎப்டி, பாரதி ஏர்டெல், விப்ரோ ஆகிய நிறுவன பங்குகளின் விலைகள் தான் லேசான உயர்வைக் கண்டன.
Comments
Story first published: Wednesday, November 26, 2008, 13:03 [IST]