போலீஸ் ஜீப்களில் தப்பிச் சென்ற தீவிரவாதிகள்
நேற்றிரவு மும்பையில் 9 இடங்களில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் கொலாபா பகுதியி்ல் திடீரென கையெறி குண்டுகளை வீசினர்.
இதில் பலர் அந்த இடத்திலேயே இறந்தனர். இதையடுத்து துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்தனர்.
இதைத் தொடர்ந்து அங்கு போலீசார் விரைந்தனர். அவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தபோது 3 தீவிரவாதிகள் அங்கிருந்து நழுவி போலீசாரின் இரு ஜீப்களில் ஏறினர்.
அதில் ஒன்று மகிந்திரா ஜீப், இன்னொன்று குவாலிஸ் ஜீப்பாகும். மகிந்திரா ஜீப்பின் எண் MH01 BA 5179. ஒரு குவாலிஸ் ஜீப்பின் எண் MH01 -2A- 102 ஆகும்.
இரண்டும் சிவப்பு விளக்குகள் பொறுத்தப்பட்டவை. அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. இன்னும் அந்த இரு ஜீப்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. தீவிரவாதிகளும் பிடிபடவில்லை.
இந்த வாகனங்களைப் பார்ப்போர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.