For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீவிரவாதம்-தைரியமாய் எதிர்கொண்ட சென்செக்ஸ்

By Staff
Google Oneindia Tamil News

BSE
மும்பை: தீவிரவாதிகளின் இந்த அளவுக்கான மாபெரும் தாக்குதலால் பங்கு விலைகளில் பெரும் சரிவு ஏற்படலாம் என்ற அச்சத்துக்கிடையே இன்று இந்திய பங்குச் சந்தைகள் திறக்கப்பட்டன.

ஆனால், உலகளாவிய அளவில் மற்ற சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவையே இந்திய பங்குச் சந்தையும் இன்று பிரதிபலித்தது. தீவிரவாதிகள் தாக்குதலை எதிரொலிக்கும் வகையில் பெரிய அளவில் சரிவு ஏதும் ஏற்படவில்லை. இதன் மூலம் தீவிரவாதத்துக்கு எதிரான 'போரில்' பங்குச் சந்தை தன்னால் முடிந்த அளவுக்கு பங்கெடுத்து சாதித்துள்ளது.

நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தால் மும்பை பங்குச் சந்தையும் அதையொட்டி தேசிய பங்குச் சந்தையும் மூடப்பட்டன.

இன்று பெரும் சரிவு பயத்துக்கு இடையே தான் சந்தைகள் திறந்தன. ஆனால், 137 புள்ளிகள் அளவுக்கே சரிவு ஏற்பட்டு சென்செக்ஸ் 8889 புள்ளிகளுக்கு வந்தது.

இதுவும் கூட உலக அளவில், குறிப்பாக ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவையே எதிரொலி்த்துள்ளது. தீவிரவாத தாக்குதலால் அஞ்சப்பட்ட சரிவு ஏற்படவில்லை.

அதே போல தேசிய பங்குச் சந்தையான நிப்டியிலும் 61 புள்ளிகள் சரிவு ஏற்பட்டு 2690 புள்ளிகளுக்கு வந்தது.

பங்குச் சந்தைகளின் ஏற்ற இறக்கத்தை அரசு நினைத்தால் கூட ஊதிவிடலாம் அல்லது குறைத்துவிடலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X