For Daily Alerts
Just In
தாஜ் ஹோட்டலை பார்வையிட்ட ரத்தன் டாடா
மும்பை: மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான தனது தாஜ் மகால் ஹோட்டலை டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா இன்று வெளியிலிருந்து பார்வையிட்டார்.
உள்ளே ஒவ்வொரு அறையாக கமாண்டோக்கள் சோதனை நடத்தி வருவதால் அவர் உள்ளே செல்லவில்லை. வெளியில் இருந்தபடியே சேதங்களை அவர் பார்வையிட்டார்.
தாஜ் ஹோட்டல் குழுமம் டாடா நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.
'ஆபரேசன் சைக்ளோன்':
தாஜ் ஹோட்டலில் கமாண்டோக்கள் நடத்திய தாக்குதலுக்கு 'ஆபரேசன் சைக்ளோன்' என கோட் நேம் தரப்பட்டுள்ளது. இந்த ஆபரேசன் இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது. ஒவ்வொரு அறையாக கமாண்டோக்கள் திறந்து சோதனையிட்டு கிடக்கும் உடல்களை வெளியேற்றி வருகின்றனர்.
Comments
Story first published: Saturday, November 29, 2008, 15:53 [IST]