For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னை அருகே காலராவுக்கு பெண் பலி
திருவள்ளூர்: காலராவுக்கு அம்பத்தூரில் ஒரு பெண் பலியானார்.
சென்னை அருகே அம்பத்தூர், மேலப்பேடு கிராமத்தைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கு வயது 30.
இவர் வயிற்றுக் கோளாறு காரணமாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.
அவர் காலராவால் உயிரிழந்ததாக உறவினர்கள் கூறியுள்ளனர். தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணைக்குப் பிறகே அவர் காலராவால் இறந்தாரா அல்லது வேறு காரணமா என்பது தெரிய வரும் என அவர்கள் தெரிவித்தனர்.
டாக்டர்களும், உரிய விசாரணைக்குப் பிறகே பெண்ணின் சாவுக்கான காரணம் தெரியும் என கூறியுள்ளனர்.
Comments
Story first published: Saturday, November 29, 2008, 15:12 [IST]