For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாவூதை ஒப்படைக்க பாக்.கிடம் இந்தியா கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

Dawood
டெல்லி: மும்பை தாக்குதல் தொடர்பாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் ஷாகித் மாலிக் மற்றும் துணைத் தூதர் அப்துல் சையத் ஆகியோரை நேரில் அழைத்து இந்திய வெளியுறவுத்துறை இன்று கடும் கண்டனம் தெரிவித்தது.

வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் பி.ஆர். ராகவன் இந்த இருவரிடம் இந்த கண்டனத்தைத் தெரிவித்தார்.

மேலும் இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகள், ஐஎஸ்ஐயின் சில சக்திகள், அங்கே ராணுவ பாதுகாப்புடன் பதுங்கியிருக்கும் தாவூத் இப்ராகிம் ஆகியோருக்கு முழுத் தொடர்பு இருப்பது தெளிவாகிவிட்டதாகக் கூறியுள்ள இந்தியா, தாவூதை உடனே இந்தியாவுடன் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.

மேலும் ஜெய்ஷ் ஏ முகம்மத் நிறுவனரான மெளலான மசூத் அஸாரையும் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கோரியுள்ளது. இவரை 1999ம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்குக் கடத்தப்பட்ட இந்திய விமான பயணிகளை மீட்பதற்காக இந்தியா விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால் பாகிஸ்தானுடனான எல்லா உறவுகளையும் துண்டிப்போம் என்றும் இந்தியா எச்சரித்துள்ளது.

மேலும் இந்தத் தாக்குதல் தொடர்பாக இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களையும் தூதரிடம் இந்தியா வழங்கியது.

இதற்கிடையே ஐஎஸ்ஐயின் செய்தித் தொடர்பாளரான அத்தார் அப்பாஸ், எல்லையில் பாகி்ஸ்தான் படைகள் எதையும் குவிக்கவில்லை என்று அறிக்கை விட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X