இலங்கை-பட்டினி போட்டு கொல்லப்படும் தமிழர்கள்
கிளிநொச்சியை புலிகளின் மாவீரர் தினமான நவம்பர் 27ம் தேதிக்குள் பிடித்துவிடுவோம் என்று ராணுவம் கூறியது. ஆனால், இலங்கை ராணுவத்தின் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. அங்கு கடும் சண்டை நீடித்து வருகிறது.
இதற்கிடையே இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிளிநொச்சியின் மேற்கு மற்றும் தெற்கு எல்லை பகுதியில் நிலைக் கொண்டிருக்கும் ராணுவ துருப்புகள் புலிகளின் நிலைகளை தாக்கி அழித்து அந்த நகரத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
கிளிநொச்சிக்கு அருகே உள்ள அடம்பன் பகுதிக்கு தெற்கே ராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையே கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கடும் சண்டை நடைபெற்று வருவதாகவும், இதில் புலிகளின் பல அரண்கள் அழிக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழர் குடியிருப்புகள் மீது குண்டுவீச்சு:
இதற்கிடையே கிளிநொச்சியை சுற்றி உள்ள தமிழர்கள் குடியிருப்புகள் மீதும் ராணுவமும் விமானப் படை விமானங்களும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.
ஏற்கனே மழை வெள்ளத்தால் ஏராளமான தமிழர்கள் வீடுகளை இழந்துள்ள நிலையில் இந்தக் கொடுமையும் நடந்து வருகிறது.
அடித்துச்
குண்டுவீச்சாலும் வெள்ளத்தாலும் வீடுகளை இழந்துவிட்ட சுமார் 21,000 தமிழர்கள் பள்ளிக் கூடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனால் அப் பகுதியின் 23 பள்ளிக் கூடங்களில் அகதிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அங்கு உணவோ, மருந்தோ ஏதுமில்லை.
இதனால் சுமார் 6,000 குழந்தைகளும் பட்டினி கிடந்து வருகின்றனர்.