For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கார் நிறுவனங்களைக் காப்பாற்ற 15 பில்லியன் உதவி: அமெரிக்கா அறிவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உதவ 15 பில்லியன் டாலர்களைத் தர முடிவு செய்துள்ளது அமெரிக்க அரசு.

அமெரிக்க காங்கிரசுடன் பேசிய பிறகு அதிபர் புஷ் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நாடு அமெரிக்கா. இங்குள்ள டெட்ராய்டில்தான் ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு, கிறிஸ்லர் போன்ற பெரிய கார் உற்பத்தி நிறுவனங்கள் இயங்குகின்றன.

இவை அனைத்துமே கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால், திவால் நோட்டீஸ் கொடுத்துவிடும் முடிவுக்கு வந்தன. இதிலிருந்து தப்பிக்க நிதி உதவி வேண்டும் என இவை அமெரிக்க காங்கிரஸிடம் முறையிட்டன.

நீண்ட விவாதங்களுக்குப் பின் அமெரிக்க ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியைத் தடுக்க, 15 பில்லியன் டாலர்கள் வரை உதவ முன்வந்துள்ளது அமெரிக்க அரசு.

ஏற்கெனவே அமெரிக்க வங்கித் துறையைக் காப்பாற்ற 700 பில்லியன் நிதி உதவி தந்துள்ளது அமெரிக்கா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X