For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹஜ் யாத்திரை: இதுவரை 57 இந்திய யாத்ரீகர்கள் மரணம்

By Staff
Google Oneindia Tamil News

துபாய்: ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டுள்ள இந்தியர்களில் இதுவரை 57 பேர் மரணமடைந்துள்ளனர். யாத்திரை வந்துள்ள யாத்ரீகர்கள், புனித அராபத் மலையில் குவிந்து வருகின்றன்ர.

மினாவில் தங்கி பிரார்த்தனையில் ஈடுபட்ட ஹஜ் யாத்ரீகர்கள் தற்போது அராபத் மலையில் குவிந்துள்ளனர்.

ஹஜ் யாத்திரை சுமூகமாக நடந்து வருவதாக மத்திய ஹஜ் கமிட்டி தலைவரும், இளவரசருமான காலித் அல் பைசல் தெரிவித்துள்ளார்.

மினா நகரிலிருந்து மெக்காவுக்கு செல்லும் யாத்ரீகர்களின் பயணம் எந்தவிதப் பிரச்சினையும் இன்றி நடந்து வருவதாகவும் இளவரசர் காலித் தெரிவித்தார்.

178 நாடுகளைச் சேர்ந்த 17 லட்சத்து 29 ஆயிரத்து 841 யாத்ரீகர்கள் ஹஜ் பயணமாக சவூதி அரேபியா வந்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து மட்டும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 387 யாத்ரீகர்கள் சவூதி வந்துள்ளனர்.

இவர்களில் இதுவரை 57 பேர் உடல் நலக்குறைவு, வயோதிகம் உள்ளிட்ட காரணத்தால் உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் அனைவரின் உடல்களும் மெக்காவில் அடக்கம் செய்யப்பட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X