For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடக்கம் செய்யப்பட காத்திருக்கும் தீவிரவாதிகளின் உடல்கள்

By Staff
Google Oneindia Tamil News

மும்பை: மும்பைத் தீவிரவாதத் தாக்குதலின்போது கமாண்டோக்களால் சுட்டுக் கொல்லப்பட்ட 9 தீவிரவாதிகளின் உடல்களும், அடக்கம் செய்ய இடம் கிடைக்காமல் 3 வாரங்களாக மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளன.

மும்பை தீவிரவாதத் தாக்குதலை மேற்கொண்டு பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட 9 தீவிரவாதிகளின் உடல்களையும் அடக்கம் செய்ய இடம் தர மாட்டோம் என மும்பையைச் சேர்ந்த பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் கூறி விட்டன. இதனால் உடல்களை அடக்கம் செய்ய மயானம் கிடைக்கவில்லை.

அதேசமயம், இவர்களை பாகிஸ்தானியர் என அந்நாட்டு அரசும் அங்கீகரிக்க மறுத்து, உடல்களைப் பெற முன் வராமல் இருக்கிறது.

இதனால் கடந்த 3 வாரங்களாக 9 பேரின் உடல்களும் மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இதுதொடர்பாக பாகிஸ்தான் தூதரகத்தை அணுகி உடல்களைப் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யுமாறு கோரி மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு மும்பை காவல்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

தற்போது 9 உடல்களும் ஜேஜே மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

மும்பை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானியர் அல்ல என்று தொடர்ந்து பிடிவாதமாக கூறி வருகிறது பாகிஸ்தான். உயிருடன் பிடிபட்ட கஸாப், தான் பாகிஸ்தானி என்பதை தானே விவரித்து பாகிஸ்தான் தூதரகத்திற்குக் கடிதம் எழுதியும் கூட அதையும் ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை அந்த நாடு.

9 பேரின் உடல்களையும் யாரும் பெற முன்வராவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று மும்பை போலீஸ் கமிஷனர் ஹசன் கபூரிடம் கேட்டபோது, யாரும் வராவிட்டால், சட்டத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளின்படி உடல்கள் அப்புறப்படுத்தப்படும் என்றார்.

உடல்களை யாரும் பெறாவிட்டால், மும்பை போலீஸாரே தங்களது சொந்த செலவில் அடக்கம் செய்வார்கள் எனத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X