For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேச நலன் கருதி அதிமுகவோடு கூட்டணி-சிபிஎம்

By Staff
Google Oneindia Tamil News

கடலூர்: தேசத்தின் நலன் கருதியே அதிமுகவோடு தொகுதி உடன்பாடு காண முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

கடலூரில் சி.பி.எம். சார்பில் நடைபெற்ற அலுவலக திறப்பு விழா கூட்டத்தில் சி.பி.எம். மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:

இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், சிபிஐ தேசிய செயலாளர் டி.ராஜா ஆகியோர் தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்தனர்.

அன்று, ஆதரவு கொடுக்காத நீங்கள் இன்று அதிமுகவோடு கூட்டணியா? என்று திமுக கேட்கின்றது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 11 ஐந்தாண்டு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. ஆனால், சாதாரண மக்களிடம் வறுமை மட்டுமே பெருகி உள்ளது. சிலரிடம் மட்டுமே செல்வம் பெருகியுள்ளது.

மத மோதல்கள் உச்ச நிலைக்கு சென்றுள்ளது. ஜனநாயகம் நாசம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் காங்கிரஸ் கட்சிதான்.

இந்தியாவில் ஆண்டு பட்ஜெட்டே ரூ.6.5 லட்சம் கோடிதான். ஆனால் நெருக்கடியில் சிக்கிய சில தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு 2 லட்சம் கோடி ரூபாயை தாரை வார்த்துள்ளது.

எனவே தவறுகள் மலிந்த மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்தும், மத வெறி சக்திகளுக்கு மாற்றாகவும் மூன்றாவது அணி அவசியமாகின்றது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X