For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாய் மதம் திரும்பியோருக்கு இ.முன்னணி வாழ்த்து

By Staff
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: இந்து மதத்திற்குத் திரும்பிய 29 பேருக்கு இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் வாழ்ததும், வரவேற்பும் தெரிவித்தார்.

இந்து மதத்தை விட்டு வேறு மதத்திற்கு சென்ற 29 பேர் மீண்டும் தாய் மதத்திற்கு திரும்பும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் நடந்தது. இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராமகோபாலன் தலைமை வகித்தார்.

சுவாமி விவேகனந்தா ஆசிரம வெள்ளிமலை ராம் டிரஸ்ட் தலைவர் சுவாமி சைதானந்தா முன்னிலை வகித்தார்.
இதையொட்டி கணபதி ஹோமமும், வேத பாராயணமும் நடந்தது.

தொடர்ந்து ராமகோபாலன் முன்னிலையில் தூத்துக்குடி, தெற்குசிலுக்கன்பட்டி, சாத்தான்குளம், புத்தன்தருவை, தாய்விளை, சிதம்பரநகர், ஆழ்வார்திருநகர், தென்திருப்பேரை ஆகிய பகுதிகளை சேர்ந்த 21 ஆண்களும், 8 பெண்களும் மீண்டும் இந்து மதத்தை தழுவினர்.

அவர்களுக்கு ராமகோபாலன் இனிப்பு மற்றும் பழங்களை வழங்கினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X