For Quick Alerts
For Daily Alerts
Just In
எலி விழுந்த சோடாவைக் குடித்த பெண் மயக்கம்
புதுச்சேரி: புதுச்சேரியில், எலி விழுந்து கிடந்த சோடாவைக் குடித்த 30 வயதுப் பெண் வாந்தி எடுத்து மயக்கமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
புதுச்சேரி, ஒட்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. 30 வயதாகும் இவர், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட, செவன் அப் பாட்டிலில் அடைக்கப்பட்ட சோடாவை கடையில் வாங்கிக் குடித்துள்ளார்.
அப்போது அதில் எலி ஒன்று செத்துக் கிடந்துள்ளது. இதை சாந்தி கவனிக்காமல் குடித்துள்ளார்.
குடித்து முடித்த பின்னர்தான் எலி கிடந்ததைப் பார்த்தார் சாந்தி. இதையடுத்து வாந்தி எடுத்தபடி மயக்கம் போட்டு விழுந்தார்.
உடனடியாக அவரை முதலியார்ப்பேட்டை ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அரசு பொது மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments
Story first published: Thursday, December 18, 2008, 10:03 [IST]