ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயலதிகாரியாக சந்தா நியமனம்
கே.வி.காமத் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் தேதியுடன் சிஇஓ பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். அதன் பின்னர் காமத்தும், கோச்சாரும் புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள்.
ஐசிஐசிஐ வங்கியின் இணை நிர்வாக இயக்குநராகவும், குழுமத்தின் முதன்மை நிதி அதிகாரியாகவும் தற்போது சந்தா இருந்து வருகிறார். 1984ம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியில் நிர்வாக டிரெய்னியாக இணைந்தவர் சந்தார்.
வர்த்தக வங்கியாக ஐசிஐசிஐ 1993ம் ஆண்டு மாறியபோது, அதன் செயல்பாடுகளை நிர்வகிக்கும் குழுவில் சந்தா இடம் பெற்றார்.
ஐசிஐசிஐ வங்கியின் வர்த்தக செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சியில், சந்தாவின் பங்கு முக்கியமானது. 2001ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் ஐசிஐசிஐ வங்கியின் ரீடெய்ல் பிரிவின் செயல் இயக்குநராகப் பொறுப்பேற்றார்.
2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துணை நிர்வாக இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டார்.
பார்ச்சூன் பத்திரிக்கையின் உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகளின் பட்டியலில் இடம் பெற்று வந்தவர் சந்தா என்பது குறிப்பிடத்தக்கது.