For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு-விஜயகாந்த் விடுதலை

By Staff
Google Oneindia Tamil News

ஆற்காடு: தேர்தல் விதிமுறை மீறல் வழக்கில் தேமுதிக திலைவர் விஜயகாந்த் விடுவிக்கப்பட்டார்.

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலுக்காக 22-03-2006 அன்று வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் கத்தியவாடி சாலை அருகில் தேமுதிக திலைவர் விஜயகாந்த் தனது கட்சி வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்தார்.

இந்த பிரச்சாரம் தேர்தல் விதிகளை மீறியது என்று கூறி தேமுதிக திலைவர் விஜயகாந்த் உள்பட சுமார் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு ஆற்காடு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விஜயகாந்த் நீதி மன்றத்தில் ஆஜர் ஆனார்.

அப்போது, தேமுதிக தலைவர் விஜயகாந்த் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடுகையில் தேர்தல் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தேர்தல் கமிஷன் மட்டுமே வழக்கு பதிவு செய்ய சட்டத்தில் இடம் உள்ளது. போலீசாருக்கு வழக்கை தாக்கல் செய்ய சட்டத்தில் இடம் இல்லை. எனவே இந்த வழக்கை தளுபடி செய்ய வேண்டும் என்று கூறி வாதிட்டார்.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் குணசேகர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கறிஞரின் வாதத்தை ஏற்று விஜயகாந்த் மீது போலீசார் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X