திருமங்கலம்-சரத் கட்சி வேட்பாளர் இரா.பத்மநாபன்
மதுரை: திருமங்கலம் இடைத் தேர்தலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளராக இரா.பத்மநாபன் போட்டியிடுவார் என அக் கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
நெல்லையில் நடந்த அக் கட்சியின் கூட்டத்தில் பத்மநாபனை சரத்குமார் அறிமுகம் செய்து வைத்தார்.
பத்மநாபன் (51) பத்தாம் வகுப்புவரை படித்தவர். திருமங்கலத்தில் ஹோட்டல் நடத்தி வருகிறார். திருமங்கலம் கற்பகம் நகரில் வீடு உள்ளது. இவரது மனைவி அகிலாபத்மநாபன் திருமங்கலம் நகரசபையின் முன்னாள் கவுன்சிலர் ஆவார். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
திருமங்கலம் இடைத் தேர்தல் குறித்து சரத்குமார் கூறுகையில்,
திருமங்கலம் தொகுதியில் நாம் நிற்க வேண்டும் என்று சொன்னவுடன், ஒரு சிலர் அங்கு பணம் ஆறுபோல ஓடும் என்று கூறினார்கள். திருமங்கலம் தொகுதியில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் திருமங்கலம் தொகுதி திண்டுக்கல் தொகுதியை போல ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என்றார்.