For Daily Alerts
Just In
சிமெண்டு ஏற்றுமதிக்கு தடை ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: சிமெண்டு ஏற்றுமதிக்கு விதித்திருந்த தடையை மத்திய அரசு விலக்கிக் கொண்டுள்ளது.
உள்நாட்டில் சிமெண்டு விலை உயர்ந்ததை தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம், சிமெண்டு ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.
ஆனால் தற்போது உள்நாட்டில் பல்வேறு நிறுவனங்களும் சிமெண்ட் விலைக்குறைப்பில் இறங்கியுள்ளன.
எனவே சிமெண்ட் ஏற்றுமதி மீதான தடையை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்கான உத்தரவை, மத்திய ஏற்றுமதி வர்த்தக கழகம் பிறப்பித்தது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Comments
Story first published: Tuesday, December 23, 2008, 10:31 [IST]