For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராணுவ தளபதி தீபக் கபூர் சியாச்சின் விரைந்தார்

By Staff
Google Oneindia Tamil News

Gen Deepak Kapoor
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளிலும், சியாச்சின் பகுதியிலும் இந்தியத் துருப்புகளின் ஆயத்த நிலை குறித்து அறிவதற்காக ராணுவ தளபதி ஜெனரல் தீபக் கபூர் அங்கு விரைந்துள்ளார்.

இன்று காலை கபூர் சியாச்சின் புறப்பட்டுச் சென்றார். அங்கு இன்று முழுவதும் அவர் தங்கியிருப்பார். அங்குள்ள படைப் பிரிவுகளின் கமாண்டர்கள், மூத்த ராணுவ அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துவார். பின்னர் ஸ்ரீநகர் திரும்பி, ஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளின் நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்தியா தாக்குமோ என்ற பெரும் பீதி பாகிஸ்தானில் நிலவுகிறது. இதையடுத்து பாகிஸ்தான் விமானப்படை, ராணுவம் மற்றும் கடற்படையினர் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

எல்லைப் பகுதியில் ரேஞ்சர்களின் எண்ணிக்கையை பாகிஸ்தான் ராணுவம் அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்திய தரப்பிலும் ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானுடனான மேற்கு எல்லையில் இந்திய ராணுவ அணிகள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும் விமானப்படையும் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடல் கண்காணிப்பையும் கடற்படை அதிகரித்துள்ளது நினைவிருக்கலாம்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர், பார்மர் மற்றும் பூஜ் ஆகிய பகுதிகளில் விமானப்படை பிரிவுகள் அனுப்பப்பட்டுள்ளன. பஞ்சாப் எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படை உஷார் நிலையி்ல் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில்தான் ராணுவ தளபதி கபூர் காஷ்மீர் விரைந்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X