For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேமுதிகவுக்கு முரசு சின்னத்தை விட்டுத் தந்த சரத்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை: திருமங்கலம் சட்டசபை இடைத் தேர்தலில் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் தனபாண்டியனுக்கு முரசு சின்னத்தை விட்டுத் தந்துள்ளார் சரத்குமார். அவரது அஇசம கட்சி வேட்பாளரான பத்மநாபனுக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருமங்கலம் இடைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக, அஇசமக உள்ளிட்ட 12 சுயேச்சைகளும் 'முரசு' சின்னம் கேட்டு விண்ணப்பித்ததால் அந்த சின்னம் யாருக்கு என்பதில் சிக்கல் ஏற்பட்டது.

முதலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது. பின்னர் பதிவு பெற்ற கட்சிகளான தேமுதிக, அஇசமக ஆகிய கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அப்போது முரசு சின்னத்தை தேமுதிக கேட்டதால் அதை அவர்களுக்கு விட்டுத் தருமாறு கட்சியின் தலைவர் சரத்குமார் தனது வேட்பாளரை அறிவுறுத்தினார்.

இதையடுத்து அந்த சின்னம் தேமுதிகவுக்கு விட்டுத் தரப்பட்டது.

அஇசமக வேட்பாளர் பத்மநாபனுக்கு டார்ச் லைட் சின்னம் கிடைத்தது.

இதற்கிடையே சுயேச்சை வேட்பாளர் ஒருவர் மனுவை வாபஸ் பெற்றதால் இப்போது இந்தத் தொகுதியில் 26 பேர் களத்தில் உள்ளனர். இதனால் இங்கு இரண்டு ஓட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவு்ளன.

வரும் ஜனவரி 9ம் தேதி இங்கு வாக்குப் பதிவு நடக்கிறது.

களத்தில் உள்ள வேட்பாளர்கள் விவரம்: லதா அதியமான் (திமுக,), முத்துராமலிங்கம் (அதிமுக), தனபாண்டியன் (தேமுதிக), பத்மநாபன் (அஇசமக)

சுயேச்சைகள்:

ராமசாமி, ராஜாங்கம், கலுவநாதன், கலைச்செல்வன், கேபிரியேல் சந்திரமோகன், கோதண்டபாணி, சந்திரன், சின்னராஜ், தனுஷ்கோடி, செல்வம், திலகர், நூர்முகம்மது, பத்மராஜன், பரமசிவம், பாண்டிக்குமார், பாக்கியசெல்வன், பாபுவெங்கடேஷ், பால்பாண்டி, மன்மதன், முருகன், ரமேஷ்பாபு, ஸ்டான்லி ஆல்வின் ஆகியோர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X