For Daily Alerts
Just In
பரோடா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கிகளும் வட்டியைக் குறைத்தன!
பேங்க் ஆப் பரோடா 75 புள்ளிகள் அடிப்படையிலும், பஞ்சாப் நேஷனல் வங்கி 50 புள்ளிகள் அடிப்படையிலும் முதன்மை கடன் வழங்கலுக்கான வட்டியைக் குறைத்துள்ளன. இதன்படி இரு வங்கிகளும் இனி 12.50 மற்றும் 12 சதவிகிதத்தில் கடன்களை வழங்கும். இந்த புதிய விகிதம் ஜனவரி முதல் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.
அதேபோல டெபாஸிட்டுகளுக்கும் வட்டி குறைக்கப்பட்டுள்ளது.
வீட்டு வசதிக் கடன்களுக்கு 175 புள்ளிகள் அடிப்படையில் ஏற்கெனவே குறைக்கப்பட்ட வட்டி விகிதம் ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி ரூ.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு 8.5 சதவிகிதமாக வட்டி (20 ஆண்டுகளுக்கு) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.5 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு 9.25 சதவிகிதம் இனி வட்டி விதிக்கப்படும்.
கனரா வங்கி மற்றும் யூனியன் வங்கியும் வட்டிக் குறைப்பை அறிவித்துள்ளன.
Comments
Story first published: Monday, December 29, 2008, 13:45 [IST]