For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மைனர் பெண்ணுடன் உல்லசம்: கல்வித்துறை ஊழியர்கள் கைது-கற்பழிப்பு வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: விபச்சாரப் பெண்களுடன் ஜாலியாக இருந்த இரு கல்வித்துறை ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். மைனர் பெண்ணிடம் உல்லாசமாக இருந்த ஊழியர் மீது கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள எம்பி இன்டர்நேஷனல்' என்ற லாட்ஜில் 2 இளம் பெண்களிடம் இருவர் உல்லாசமாக இருப்பதாக சென்னை சிபிசிஐடி விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு ரெய்டு நடத்த சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் உத்தரவிட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஆனந்த பிரகாசம் தலைமையிலான தனிப்படை அங்கு விரைந்தது.

லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அறை ஒன்றில் 15 வயது மைனர் பெண் மற்றும் 19 வயது இளம்பெண் ஒருவரிடம் இருவர் உல்லாசமாக இருந்தனர். அவர்களை தனிப்படை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

பிடிபட்ட நபர்களில் ஒருவர் பெயர் சுகுமாரன். இவருக்கு வயது 50. இன்னொருவர் பெயர் ஜஸ்டர் ஆபிரகாம் (38).

இருவரும் உதவியாளர்கள்:

சுகுமாரன் சென்னை மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக இருக்கிறார். ஜஸ்டர் ஆபிரகாம் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் இருக்கும் பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றுகிறார்.

இருவரும் ரூ.5,000 பணம் கொடுத்து அந்தப் பெண்களிடம் உல்லாசமாக இருந்துள்ளனர். இருவரும் கைது செய்யப்பட்டார்கள். பெண்கள் இருவரும் கோர்ட்டு அனுமதியுடன் அரசு பெண்கள் விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபசாரத்துக்கு அறை கொடுத்த லாட்ஜ் மானேஜர் சந்தோஷ்குமார், அழகிகளை சப்ளை செய்த, அதே பகுதியில் உள்ள இன்னொரு லாட்ஜின் ஊழியர் பெரியசாமியும் கைதானார்கள்.

வழக்கமாக இதுபோன்ற வழக்குகளில் ஆண்கள் கைது செய்யப்படுவதில்லை. பெண்கள் மட்டுமே கைது செய்யப்புடவார்கள். ஆனால் இந்த வழக்கில் இரு கல்வித்துறை ஊழியர்களையும் போலீஸார் கைது செய்து சிறையிலும் அடைத்து அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர்.

அத்தோடு நில்லாமல், 15 வயது பெண், சிறுமி என்ற கணக்கில் (மைனர்) வருவார் என்பதால், அந்த சிறுமியிடம் உல்லாசம் அனுபவித்த சுகுமாரன் மீது கற்பழிப்பு வழக்கையும் போலீஸார் போட்டுள்ளனர்.

மேலும், இனிமேல் விபச்சாரப் பெண்களுடன் சிக்கும் ஆண்களும் கைது செய்யப்பட்டு சிறையி்ல் அடைக்கப்படுவார்கள் எனவும் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X