For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கள்ளக் காதலியுடன் தகராறு-சிறுவன் பலி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அருகே கள்ளக் காதலியுடன் ஏற்பட்ட தகராறில், அவரது 5 வயது மகனைக் கொடூரமாகக் கொன்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவொற்றியூர் பட்டினத்தார் குப்பத்தைச் சேர்ந்தவர் கல்பனா (25). இவரது கணவர் மூர்த்தி (30). இவர்களது குழந்தைகள் ரம்யா (9), வசந்தகுமார் (5).

இந் நிலையில் கல்பனாவுக்கும், நாராயணன் என்பவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. 9 மாதங்களுக்கு முன்பு கல்பனா தனது கணவர் மூர்த்தியை விட்டு பிரிந்து நாராயணனுடன் சேர்ந்து குடித்தனம் நடத்தத் தொடங்கினார். 2 குழந்தைகளும் கல்பனாவுடன் வசித்தனர்.

இந் நிலையில் நேற்று மூர்த்திக்கு அவரது மகன் வசந்தகுமார் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து விட்டதாக தகவல் கிடைத்தது. தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கருதிய அவர் தனது உறவினர்களுடன் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுவனை நாராயணன் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

நேற்று கல்பனாவுக்கும், அவரது நாராயணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம், அப்போது வசந்தகுமாரை நாராயணன் கண்மூடித்தனமாக அடித்ததுள்ளார். கொடூரமாக அடித்ததில் மயங்கி விழுந்த சிறுவன் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயரிழந்ததும் விசாரணையில் அம்பலமானது.

இதையடுத்து நாராயணனை போலீசார் கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X