தேர்தல் விதிமீறலில் தமிழகம் நம்பர் ஒன் - கோபாலசாமி
சென்னை: தேர்தல் விதி மீறல் செயல்களில் பீகார், உ.பியைத் தாண்டி தமிழகம் முதலிடத்திற்கு வந்துள்ளது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி கூறியுள்ளார்.
சென்னைக்கு நேற்று வந்த கோபாலசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்பு பீகார், உ.பி. குறித்து நாம் அதிகம் பேசுவோம். இப்போது தமிழகத்தைப் பற்றிப் பேசுகிறோம் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கோபாலசாமி அளித்த பதில்களும்...
கேள்வி: திருமங்கலம் தொகுதியில் பல்வேறு அரசியல் கட்சிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறதே...
கோபாலசாமி: தினமும் பத்திரிகைகளில் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். நாட்டுக்கே தெரியும்.
கேள்வி: அமைச்சர் ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படுமா...
கோபாலசாமி: பார்த்துக் கொள்ளலாம்.
கேள்வி: அமைதியாக தேர்தல் நடக்குமா ...
கோபாலசாமி: நடப்பைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறீர்கள். தமிழகம் கடைசியில் இருந்து முதலிடத்திற்கு வந்துள்ளது என்று கூறிய கோபாலசாமி, காரில் ஏறுவதற்கு முன்பு முன்பு தேர்தல் விதி மீறலுக்கு பீகாரை சொல்வோம். இப்போது தமிழ்நாட்டைச் சொல்கிறோம் என்று கூறியபடி ஏறிக் கிளம்பினார்.