பெட்ரோல் விலை ரூ.5-டீசல் ரூ.3 குறைகிறது!
டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 10 குறைக்க வேண்டும் என்று கோரி லாரி உரிமையாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா,
பெட்ரோலிய நிறுவனங்களைச் சேர்ந்த சில அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது கடும் கண்டனத்துக்குரியது. பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றது மகிழ்ச்சி.
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையையும் குறைக்க முயன்று வருகிறோம். விலையை சிலிண்டருக்கு ரூ. 50 வரை குறைக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியிருக்கிறார். ஆனால், அவ்வளவு குறைக்க முடியாது என்பதை அவரிடம் சொல்லியிருக்கிறேன்.
அதே நேரத்தில் விலையை 25 ரூபாய் வரை குறைக்க முயன்று வருகிறோம். பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3ம் குறைக்கப்படும். இந்க விலையும் குறைப்பு விரைவி்ல் அமலுக்கு வரும் என்றார்.
எப்போது இந்த விலைக் குறைப்பு அமலுக்கு வரும் என்று அவர் ஏதும் கூறவில்லை. இன்னும் ஒரு வாரத்துக்குள் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரும் என்று தெரிகிறது.