For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல்வர் பதவியிலிருந்து விலகினார் சிபு சோரன் - மராண்டியும் விலகல்

By Sridhar L
Google Oneindia Tamil News

ராஞ்சி: முதல்வர் பதவியிலிருந்து ஜார்க்கண்ட் முதல்வர் சிபு சோரன் இன்று விலகினார். துணை முதல்வர் மராண்டியும் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஜார்க்கண்ட முதல்வராக உள்ள சிபு சோரன் சமீபத்தில் தமர் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் படு தோல்வி அடைந்தார்.

இதையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனால் நான் விலக மாட்டேன். மறுபடியும் இடைத் தேர்தலில் போட்டியிடுவேன் என கூறி வந்தார் சோரன். இதனால் நெருக்கடி ஏற்பட்டது.

ஜார்க்கண்ட் மாநில அரசை டிஸ்மிஸ் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்தது.

இந்த நிலையில் டெல்லி சென்ற சோரன் காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பதவியிலிருந்து விலகி விடுமாறு அவருக்கு காங்கிரஸ் தலைமை ஆலோசனை கூறியது.

லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளமும், சோரன் விலக அறிவுறுத்தியது.

இதைத் தொடர்ந்து சோரன் ராஞ்சி திரும்பி தனது கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் நேற்று முன்தினம் விர ஆலோசனை நடத்தினார். கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஆலோசனை நடந்தது.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சோரன், நான் டெல்லி சென்று மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைமையிடம் கட்சி எடுத்துள்ள முடிவை தெரிவிக்கவுள்ளேன்.

எனது பதவியை ராஜினாமா செய்ய நான் ஒத்துக் கொண்டு விட்டேன்.

அதற்கு மேல் இப்போது எதுவும் சொல்ல மாட்டேன். லாலு பிரசாத் யாதவ் மற்றும் சோனியா காந்தியை சந்தித்து மற்ற விவரங்களைக் கூறுவேன்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தொடர்ந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் நீடிக்கும். எதிர் வரும் தேர்தல்களையும் நாங்கள் இணைந்தே சந்திப்போம். எனது தோல்வியை நான் ஒத்துக் கொள்கிறேன். மக்கள் தீர்ப்பை மதிக்கிறேன் என்றார்.

இந்த நிலையில், இன்று காலை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் சோரன்.

முதல்வர் பதவிக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த சம்பை சோரனை முதல்வராக்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார் சோரன். இதை டெல்லிக்கு சென்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளிடம் தெரிவிக்கவுள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார் சோரன்.

மராண்டியும் விலகல் ..

அவர் விலகுவதற்கு முன்பு துணை முதல்வர் ஸ்டீபன் மராண்டி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

சிபு சோரனும், மராண்டியும் தங்களது ராஜினாமா கடிதங்களை ஆளுநர் சையத் சிப்தே ரஸியை தனித் தனியாக நேரில் சந்தித்து வழங்கினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X